Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று பாபர் மசூதி இடிப்பு இடிப்பு நாள்! கோவை உட்பட மாநிலம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 Police on high alert in Tamilnadu due to Babri Masjid demolition anniversary

அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணிகள்: குறிப்பாகக் கோவையில் மட்டும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 1,200 பேர் புறநகரில் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அதிக கூட்டம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, என முக்கிய பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவோரை விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.. அவர்கள் பொதுமக்களின் பைகளைத் தொடர்ச்சியா சோதனை செய்து வருகிறார்கள்.

முக்கிய இடங்கள்: இது தவிரக் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் என முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கே வரும் பக்தர்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

மேலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க இருக்கும் முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், முக்கிய சாலைகளிலும் தொடர்ச்சியாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+