மதுரவாயல் டூ தாம்பரம் பைபாஸில் சர்.. புர்னு போன ஆட்டோக்கள்.. பணம் வைத்து ரேஸ் நடத்தியது அம்பலம்!
சென்னை: பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Recommended Video
பொதுவாக ஈசிஆர் சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் புதிதாக ஆட்டோ ரேஸ் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை மதுரவாயல்- தாம்பரம் பைபாஸில் ஆட்டோ ரேஸ் நடத்தபட்டது. இதில் 5 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பைக்குகளுடன் சிலர் இந்த ஆட்டோ ரேஸை சட்டவிரோதமாக நடத்தினர்.

மதுரவாயல் டூ தாம்பரம்
மேலும் மதுரவாயல் முதல் தாம்பரம் வரை இந்த ஆட்டோ ரேஸானது துவக்கப்பட்டு, 2000 ஆயிரம் முதல் 3000 ஆயிரம் வரை பணம் பந்தயம் வைக்கப்பட்டது. கொரானோ ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ரேஸ் சட்டவிரோதமாக நடத்தப்படாமல் இருந்தது.

போக்குவரத்து
இந்த நிலையில் தற்போது பொது போக்குவரத்திற்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று இந்த ஆட்டோ ரேஸ் கலாச்சாரமானது தலைத்தூக்கியுள்ளது.
கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற ஆட்டோ ரேசில் இதே பைபாஸில் சாலையில் நடந்த ரேஸில் விபத்து ஏற்பட்டது.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து
அந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து லாரியில் மீது மோதியதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன ஓட்டிகள்
தற்போது மீண்டும் கொரானோ தாக்கம் குறைந்து உள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் மேலும் இதனை தடுக்க போலீார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications