வெறும் புரளி! சென்னை தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தில் இருந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலானது புரளி என்றும் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் இமெயில் முகவரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் காலை 10.40 மணிக்கு கிடைத்தது. அந்த வகையில் கோபாலபுரத்தில் உள்ள டிஏவி பள்ளி, சென்னை பப்ளிக் பள்ளி, செட்டிநாடு வித்யாஸ்ரம், பவன்ஸ் வித்யாஸ்ரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Police set up special team to nab bomb threat man

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பகுதிக்குள்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது பள்ளி குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் அமர வைக்கப்பட்டனர். இதனிடையே போலீஸார் அந்தந்த பள்ளிகளுக்கு வந்த மெயிலை பார்த்த போது ஒரே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது தெரியவந்தது. [email protected] என்ற இமெயில் முகவரியிலிருந்து வந்துள்ளது.

அந்த மெயிலில் இரு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறுவதற்குள் உங்கள் மாணவர்களை காப்பாற்றுங்கள். இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகவே தகவல்கள் இருந்தன. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் அவை சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டன. இந்த நிலையில் பள்ளி பெற்றோர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலே தெரிவிக்காமல் பிள்ளைகளை அழைத்து செல்லுங்கள் என்று மட்டும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பெற்றோர் அனைவரும் ஒரே நேரத்தில் கூடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களும் வெடிகுண்டை செயலிழக்கும் நிபுணர்களும் சோதனை நடத்தியதில் அந்த மிரட்டலானது புரளி என தெரியவந்தது.

இது போல் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பெற்றோர் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் , பிள்ளைகளை எந்த பதற்றமும் இன்றி அழைத்து செல்லுமாறும் அறிவுறுத்தினர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அந்த நபர் பிடிபடுவார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+