Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருந்தில் காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத சிறுமியை... காம கொடூரரர்களை சுட்டு பொசுக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் நடந்த ஒரு கல்யாண நிகழ்வு, கற்பனையே செய்ய முடியாத கொடூரமான குற்ற சம்பவத்தால் பெரும் பரபரப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது. வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர், திருமண மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிங்காகி போலீஸ் ஸ்டேஷனுக்குபட்ட கிராமம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரம்மாண்டமான திருமண விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.. அந்த திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்திருந்தனர்.

UP Police Decisive Action

மாற்றுத்திறனாளி சிறுமி

இந்த விழாவிற்கு வந்திருந்த 13 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மண்டபம் முழுவதும் தேடினர்.

சிறுமிக்கு பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாததால், அவரைத் தொடர்பு கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, திருமண மண்டபத்திற்கு அருகில் இருந்த கரும்புத்தோட்டத்தில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

கரும்புத் தோட்டம்

அவர் கொடூரமான கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் ஜாவேத் (28) மற்றும் சோட்டு ஆகிய இரு இளைஞர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நேற்று பகலில், ஜாவேத் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்ற ஜாவேத், தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஜாவேத் போலீஸ்

இதையடுத்து, போலீசார் தற்காப்புக்காகவும், அவரைக் கட்டுப்படுத்தவும் ஜாவேத்தின் வலது காலில் சுட்டனர். குண்டு பாய்ந்து காயமடைந்த ஜாவேத்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த குற்றவாளி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான சோட்டுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் இணைந்து சிறுமியை திருமண மண்டபத்தில் இருந்து கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

முக்கிய குற்றவாளி

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீதும் போக்சோ சட்டம், கடத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ற குற்றவாளி நாட்டுத்துப்பாக்கியுடன் போலீசாரை நோக்கி சுட முயன்றதால், போலீசார் பதிலடி கொடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருமண விழாவில் பங்கேற்ற அனைவரையும் உலுக்கியுள்ளதுடன், அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+