திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருக்கும் போதும் சென்னையில் வழக்கம் போல 10 மணிக்கு பின் பலர் வெளியே சுற்றி வருகிறார்கள். விதிகளை மதிக்காமல் இப்படி வெளியே சுற்றியவர்களை போலீசார் வழிமறித்து அபராதம் வசூலித்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த லாக்டவுன் விதிகளை மக்கள் சரியாக மதிக்கவில்லை என்று கட்டுப்பாடுகள் உயர்த்தப்பட்டன. முக்கியமாக மக்கள் வெளியே செல்லும் நேரம் காலை 6-12 மணியில் இருந்து 6-10 ஆக குறைக்கப்பட்டது.
இப்படி இருந்தும் கூட சென்னையில் பல இடங்களில் மக்கள் 10 மணிக்கு பின் வெளியே செல்வது நடந்து வருகிறது. முக்கியமாக அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கிண்டி, வடபழனி, தி நகர் போன்ற இடங்களில் மக்கள் பலர் வெளியே சுற்றுவது வழக்கமாகி உள்ளது.

எச்சரிக்கை
இப்படி 10 மணிக்கு பின் வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்த பின்பும் கூட பலர் மருத்துவமனை செல்ல வேண்டும், அத்தியாவசிய தேவை என்றெல்லாம் கூறி 10 மணிக்கு பின்பும் வெளியே கார், பைக்குகளில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து இவர்களுக்காக இ பதிவு குறைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இ பதிவு
அதன்படி சென்னையில் 10 மணிக்கு பின் மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் இ பதிவு செய்ய வேண்டும். இ போர்ட்டல் தளத்தில் இ பதிவு செய்துவிட்டு, அதை காட்டி வெளியே செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று பலர் இந்த இ பதிவு கூட இல்லாமல் சென்னையில் கூட்டம் கூட்டமாக 10 மணிக்கு பின்பும் சுற்றினார்கள்.

சுற்றினார்கள்
முக்கியமாக சென்னையில் அண்ணாசாலையில் கார், பைக்குகளில் பலர் இப்படி வெளியே சென்றுள்ளனர். தி நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூரிலும் இப்படி பலர் வெளியே சுற்றி இருக்கிறார்கள். இப்படி வெளியே இ பதிவு இன்று சென்றவர்களிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். சாலைகளில் பேரிகேட் போட்டு போலீசார் ஒவ்வொருவராக பிடித்து விசாரித்தனர்.

விசாரணை
இ பதிவு இல்லாமல் 10 மணிக்கு பின் வெளியே வந்தவர்களை மறித்து போலீசார் விசாரணை செய்தனர். சென்னையில் தேவையின்றி சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. இவர்கள் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

சென்னை மோசம்
சென்னையில் தற்போதுதான் தினசரி கேஸ்கள் லாக்டவுன் காரணமாக 7000ல் இருந்து 6500க்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக கிராப் குறைந்துள்ளது. ஆனால் லாக்டவுன் விதிகளை மதிக்காமல் மக்கள் பலர் இப்படி சென்னையில் சுற்றுவது மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications