கொள்கைகளை குஸ்கா போட்டு விட்டு கூட்டணி அமைத்தால் இப்படித்தான் குண்டக்க மண்டக்க உளற நேரிடும்!
பிரச்சாரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சைகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: அவங்கவங்க கட்சிகளுக்கு வேற யாரோ "ஆப்பு" வைக்க தேவையில்லை.. அவங்கவங்க கூட்டணி கட்சி தலைவர்களே குறிபார்த்து வைத்து கொண்டு இருக்கிறார்கள்!
இந்த கட்சிதான்னு சொல்ல முடியாது.. இந்த தலைவர்னுதான் சொல்ல முடியாது.. பாரபட்சமற்ற முறையில் எல்லோருமே பிரச்சாரத்தில் உளறி கொட்டி வருகிறார்கள்.
உளறல், சர்ச்சை என்றாலே தமிழக அமைச்சர்கள் ஒருசிலர் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு கண் முன்னே வந்து நிற்கிறார்கள். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ இருவருக்குமே இதில் சம பங்கு உள்ளது!

சலிச்சு போச்சு
இப்போது நிலைமை எப்படி ஆகிவிட்டது என்றால், "அட போங்கப்பா.. இவங்க ரெண்டு பேரும் என்னைக்கு சரியா பேசுறாங்களோ அந்த மேட்டரை வந்து உடனே சொல்லு.. இதெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சு போயிச்சு"என்று சொல்லும்படி ஆகிவிட்டது

டாக்டர் ராமதாஸ்
அதிமுக, திமுக.. இந்த கட்சிகளுக்கு மட்டும் மறந்துபோய்கூட ஓட்டு போட்டுடாதீங்கன்னு சொல்கிறார் பாமக நிறுவனர்! இதே ராமதாஸை மேடையில் வைத்து கொண்டே, அவரது கட்சி சின்னமான மாம்பழத்துக்கு பதில் ஆப்பிளை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்! விஜயகாந்த் எப்பவுமே "ஒளிமயமான எதிர்காலம்" என்ற எம்ஜிஆர் பாட்டை பாடிக் கொண்டே இருப்பார் என்கிறார் பிரேமலதா!

சகோதரி கனிமொழி
"தமிழச்சி தங்கப்பாண்டியன் ஓர் அழகான வேட்பாளர்" என்று உதயநிதி சொன்ன சலசலப்பு இன்னுமும் அடங்கவில்லை. முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தூத்துக்குடியில், தமிழிசை சவுந்தராஜனுக்கு வாக்கு கேட்காமல், "பிரதமர் மோடியின் ஆசிபெற்ற அருமை சகோதரி கனிமொழி" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி வாக்கு கேட்டார்.

பிரபலம், பண பலம்
ஆக மொத்தம் என்ன நடக்கிறது என்றால்... யார் யார் எந்த எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் குழம்பிபோய் உள்ளனர். வெறும் பிரபலத்தையும், பணத்தையும் வைத்து கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டு இவர்கள் படுத்தும் பாட்டையெல்லாம் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது தலையெழுத்துபோலும்!

முரசு - தாமரை
தேர்தல் நேரம் வந்தாலே கட்சி கொள்கை, கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூட்டணி அமைத்தால், இப்படித்தான் மாம்பழம் ஆப்பிள் ஆகும், முரசு தாமரையாகும்! இவ்வளவு கேவலங்கள் வெளிப்படையாக மக்கள் முன் நடந்தும், சுதாரித்து கொண்டு தவறை திருத்தி கொள்கிறார்களே தவிர, யாரும் இதற்காக கொஞ்சம்கூட வருத்தப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

கவனமா இருக்கணும்
5 ஆயிரம் 10 ஆயிரம் வாங்கிட்டு ஓட்டு போட்டால் இப்படித்தான் இவர்களின் உளறல்கள் இன்னமும் தொடரும் அவலம் ஏற்படும் என்பதால், மக்கள் சிந்தித்து பார்த்து ஓட்டு போடுவது இந்த சமயத்தில் மிக மிக அவசியமாகிறது!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications