2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்!
பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை செய்த கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் சிக்கி தப்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை செய்த கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் சிக்கி தப்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நாளுக்கு நாள் இது குறித்து வெளியாகும் உண்மைகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.
இரண்டு நாட்கள் முன் வெளியான வீடியோ காரணமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது.மொத்தம் 253க்கும் அதிகமான பெண்கள் இது போல பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அப்போதே
இந்த கேங் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் ஒருமுறை சிக்கி இருக்கிறார்கள். பெண் ஒருவரை ஏமாற்றி அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் அப்போது போலீஸ் இவர்களை சரியாக விசாரிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அப்போது எஸ்கேப் ஆன இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களை செய்து வந்து இருக்கிறார்கள்.

வாக்குமூலம்
இது குறித்து இந்த பொள்ளாச்சி கேங் போலீஸ் வாக்குமூலத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. போலீஸ் வாக்குமூலத்தில் அவர்கள் ஏமாற்றிய பெண்கள் குறித்த தகவல்களை வாக்குமூலம் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

பெண் மருத்துவர்
இந்த கேங் பெண் மருத்துவர் ஒருவரை சென்னையில் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. அந்த பெண் மருத்துவரிடம் இவர்கள் பல லட்சம் மிரட்டி வாங்கி இருக்கிறார்கள் என்றும் பரபர தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்துதான் அந்த பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் இரண்டு வருடம் முன்பு கொடுத்த இந்த புகாரில் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் இல்லை
சரியான ஆதாரம் இல்லை என்று இவர்கள் எஸ்கேப் ஆகி உள்ளனர். இதுகுறித்துதான் தற்போது இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண்ணிடம் புகார் வாங்க போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சிபிஐ இந்த வழக்கை கையில் எடுக்க உள்ள நிலையில் இந்த வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications