நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: நன்றி மறந்தவன் தமிழன் என்றும் கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.

இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
குறிப்பாக தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி சொன்னதை தமிழர்கள் ஏன் கொண்டாடவில்லை?
நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என கடுமையாக பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications