நாளை மதியம் 1 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாகிறார் இபிஎஸ்.. புதுவை அதிமுக பரபரப்பு தகவல்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக நாளை மதியம் 1 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுகிறார் என புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது போல் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வந்துள்ளது. இதனால் நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில் 99 சதவீத்திற்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவை உறுதியாக எதிர்க்கக் கூடிய ஒற்றைத் தலைமை தேவை.

ஒற்றைத் தலைமை யார்
அந்த தலைமை என்பது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். இவர் கழகத்தின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த பொதுக் குழு கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த பொதுக் குழுவில் இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் திமுகவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர்.

நீதிமன்றத்தில்
அது போல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார்கள். இன்றைய தினம் நீதித்துறையினர் எங்கள் தரப்பின் நியாயமான காரணங்களை மனதில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

அதிமுக பொதுச் செயலாளராகிறார் இபிஎஸ்
அதன் அடிப்படையில் நாளை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் மதியம் 1 மணி அளவில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் தமிழகத்தின் மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக எதிர்த்து அரசியல் நடத்தக் கூடிய ாளுமை மிக்க தலைவராக விளங்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். இது தொடர்பான அனைத்து தடைகளும் நீங்கியது. இதுதான் உண்மை என்றார்.

தனிமரம்
பொதுக்குழு கூட்டப்படுவதே எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யத்தான் என்பதை அன்பழகன் போட்டு உடைத்துள்ளார். அது போல் நாளை மதியம் 1 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்படுகிறார். இதற்குத்தான் ஓபிஎஸ் இந்த கூட்டம் நடத்தப்படக் கூடாது என பாடுபட்டார். ஆனால் தற்போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு தனிமரமாகியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications