பொங்கலுக்கு ஊர் போக டிக்கெட் கிடைக்கலயா? சென்னை டூ மதுரைக்கு இன்று மெமு ரயில்.. ரயில்வே சர்ப்பிரைஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவு இல்லாத ஒன்வே ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு படையெடுப்பது வழக்கம். சொந்த ஊர்கள் செல்லும் மக்களின் முதல் தேர்வு ரயில் ஆகும். இதனால் பண்டிகை காலங்களில் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் சொந்த ஊர்களில் நடைபெறும் திருவிழா நாட்களிலும் இந்த மக்கள் ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களிலும், ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பொங்கல் பண்டிகை
அதிலும் பொங்கல் பண்டிகையை பற்றி சொல்லவே தேவையில்லை. சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுவார்கள். இதனால், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (14 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை தினம் வருவதால், பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதற்காக , நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.
சென்னை டூ மதுரைக்கு சிறப்பு ரயில்
இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. அதேபோல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் பஸ்-ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன.
குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் உட்கார கூட இடமின்றி கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை டூ மதுரைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயிலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
எத்தனை மணிக்கு புறப்படும்?
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னையில் இருந்து மதுரைக்க்கு முன்பதிவு இல்லாத ஒன்வே ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06161- சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு கிளம்பும். தாம்பரம் ரயில் நிலையத்திற்கு 2.43 மணிக்கு வரும் ரயில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
நின்று செல்லும் ரயில் நிலையங்கள்:
செங்கல்பட்டு ((3.15/ 3.17- வரும் நேரம்/கிளம்பும் நேரம்), மேல்மருவத்தூர் (3.43/3.45) , திண்டிவனம் (4.15/4.17), விழுப்புரம் (4.55/5.00), விருதாச்சலம்(6.30/6.32), அரியலூர் (7.08/07.10), ஸ்ரீரங்கம் (8.05/8.07) வழியாக திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும். பின்னர் மணப்பாறைக்கு 9.33 மணிக்கு வரும் இந்த ரயில் 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். திண்டுக்கல் (10.27/10.30), சோழவந்தான் (11.08/11.10) கூடல் நகர் (11.28/11.30) வழியாக மதுரைக்கு நள்ளிரவு 12.30 மண்ணிக்கு வந்து சேரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
அதேபோல, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு இன்று கிளம்பும். தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல் மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியாக திருச்சிக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து 5.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், கொடை ரோடு வழியக மதுரைக்கு காலை7.30 மணிக்கு வரும்.
இரண்டு நிமிடங்கள் மட்டுமே மதுரையில் நிற்கும் இந்த ரயில் மதுரையில் இருந்து 7.32 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10. 03 க்கு வந்து சேரும். நெல்லையில் இருந்து 10.13 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் (11.30/11.32) வழியாக திருவனந்தபுரத்திற்கு 12.40 மணிக்கு சென்றடையும். திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications