Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு ரூ.3,000? எப்போது வழங்கப்படும்? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பதில்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும், பொங்கல் பரிசுத் தொகை 3,000 ரூபாயா அல்லது 5,000 ரூபாயா என்பதை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என்றும் நிச்சயம் மக்களை மகிழ்விக்கும் வகையில் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார்.

மதங்களை தாண்டி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் தினத்தன்று மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க தமிழக அரசும் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.

Pongal Gift Amount to Be Announced by CM Stalin Says Minister MRK Panneerselvam

பொங்கல் பரிசுத் தொகை

அந்த வகையில் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் இதையொட்டி தமிழக அரசு பொங்கல் பரிசோடு பரிசுத் தொகையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படலாம் என கூறி வந்தனர்.

சிவகங்கையில் அமைச்சர் பதில்

எதிர்க்கட்சியும் பொங்கல் பரிசாக, ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முதலில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணியில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. இதனால் பரிசுத் தொகைக்கான அறிவிப்பினை தனியாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.3,000 வழங்கப்படுமா அல்லது ரூ.5,000 வழங்கப்படுமா என்பது குறித்தும், எப்போது இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சிவகங்கையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

மக்களை மகிழ்விக்கும் வகையில்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை மகிழ்விக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடுவார். அது 3000 ரூபாயா அல்லது 5,000 ரூபாயா என்பதையும் அவரே அறிவிப்பார். பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வணிப கழகத்தில் இருந்து பெறப்பட்டு, கூட்டுறவு கடைகள் மூலமாக அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

கரும்புகளை பொறுத்தவரை மாவட்ட அளவில் கமிட்டி குழு அமைத்து, அந்த குழுவினர் கொள்முதலை செய்துகொண்டு வருகிறார்கள். எல்லாமே சரியாக வந்துவிடும். பரிசுத் தொகையை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் தான் அறிவிப்பார். மற்றபடி பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, சர்க்கை உள்ளிட்ட பொருட்கள் அறிவிக்கப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகையை மட்டும் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+