Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மாஸ்.. கோயம்பேட்டில் மஞ்சள் மஞ்சளா இருக்கே.. தமிழக அரசு பொங்கல் அதிரடி.. குஷியில் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன்தாரர்களுக்கு பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை, கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அவைகளை கொண்டுசெல்லும் பணிகள் துரிதமாகி உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியுமா? கரும்பு முழுவதும் விற்குமா? என்ற நிலையில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு: கடந்த சில வருடங்களாகவே, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.. இந்த வருடமும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.. இதில் முழுக்கரும்பும் இடம்பெற்றுள்ளது.. எனவே, கரும்பு உற்பத்தியும் ஜரூரராக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காகவே, சின்னமனூர் பகுதியில் கரும்புகள் மும்முரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

Pongal Gift Package by Tamil Nadu Government and Special Market launch in Koyambedu Market for Sugarcane

முக்கியமாக, சின்னமனூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களும் இவற்றை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளன. தோட்டங்களில் வெட்டப்படும் கரும்புகள், உடனுக்குடன் லாரிகளில் ஏற்றப்படுகின்றன.. பின்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அவைகள் கொண்டு செல்லப்பட்டும் வருகின்றன.

அந்தவகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டும் படுபிஸியாகிவிட்டது.. கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தையும் ஸ்பெஷலாக தொடங்கப்பட்டிருக்கிறது..

கோயம்பேடு: வழக்கமாக கோயம்பேடு எப்போதுமே நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், இந்த முறை, மார்கெட்டுக்கு பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.. இங்குதான் சிறப்பு சந்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..

இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.. மேலும், சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது... மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தவிர ஸ்பீக்கர் மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகள் எல்லாம் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக உள்ளது.

சிறப்பு சந்தை: இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் என லோடு லோடாக வந்து இறங்க தொடங்க விட்டன. நேற்று நள்ளிரவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்தது..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து வந்து இறங்கியிருக்கிறது. இதனால், சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி கொண்டு செல்கிறார்கள்.

விற்பனை ஜரூர்: நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய போகிறதாம்.. அதேபோல, மஞ்சள் கொத்து லாரிகளில் வந்து இறங்க உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கோயம்பேடு உச்சக்கட்ட பிஸியில் காணப்படும்..

இன்று காலை நிலவரப்படி, 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை சிறப்பு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது. ஆக, பொங்கல் பண்டிகைக்குரிய மொத்த பொருளும், ஒரே இடத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, பொதுமக்களுக்கு உதவியாகவும், வசதியாகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+