Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு ரூ.3000 கன்பார்ம்.. அதிகாரிகள் கிரீன் சிக்னல்.. ஸ்டாலின் சிக்ஸர்.. யாருக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்கான கிரீன் சிக்னலை நிதித்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் ரூ.5000 வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் ரூ. 5000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும். இந்த இழப்பை தவிர்க்க ரூ.3000 கொடுத்தால் போதுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். நிதி ரீதியிலான ஆய்வுகளை செய்த அதிகாரிகள் ரூ. 3000 கொடுத்தால் பெரிய இழப்பு இருக்காது என்று முதல்வரிடம் கூறி உள்ளனர். இதையடுத்து ரூ. 3000 பொங்கலுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், மாநிலத்தின் நிதி நிலை காரணமாக அதிகாரிகள் சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளது. மேலும், அரசு ஏற்கனவே பல நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு மகளிர் உரிமைத்தொகையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக 5 ஆயிரத்திற்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் , ஸ்டாலின் அதை ஏற்றுக்கொண்டு 3 ஆயிரம் ரூபாய் வழக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை

ஏற்கனவே மகளிர் உரிமை தொகைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் எடுக்கும் சர்வே

இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சர்வே ஒன்றை நிர்வாகிகள் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்று, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினருடனும் பேச உள்ளது. பல முக்கியமான கேள்விகளை கேட்க உள்ளனர். பொங்கல் பரிசு வந்ததா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி தங்கள் வீட்டைச் சென்றடைந்ததா என விசாரித்து, ஒரு படிவத்தை வழங்கி விவரங்களை பெறுவார்கள்.

படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும். அதில் கோரிக்கையின் நிலையை அறிய முடியும். அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை கேட்டு, அதன் அடிப்படியில் உடனடி தீர்வு அல்லது தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் இதை வழங்குவார்கள் என்று ஆளும் திமுக தரப்பு கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+