தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. பொன்முடி
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

எனினும் விருப்பம் இருப்போர் நேரில் போகலாம். இல்லாதவர்கள் வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பில் இருக்கலாம் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய ஊரடங்கில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை முடித்து விட்டு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களும் எம் பில் படிப்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications