ஏழரை கோடி நிலம்; எழுதித்தந்த தாய்! தேடிச் சென்ற எம்.பி.! உருக்கமான சந்திப்பு
மதுரை: சமுக ஊடகங்கள் கொடை வள்ளல் வரிசையில் வைத்து ஆயி பூரணம் அம்மாளைக் கொண்டாடிக் கருத்திட்டு வருகிறது.
தன் பங்குக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அந்த அம்மாவைப் பற்றி, “ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளைப் பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை.

அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது! ” என்று டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
யார் இந்த ஆயி பூரணம்?

“மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்குக் கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.!
இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தறுவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தைச் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்குத் தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். !

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரிலிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கினார்.
கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தைப் பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.!” என்று ஃபேஸ்புக்கில் பிரகாஷ் என்பவர் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
இந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் இவரைக் கொண்டாட அவரது கொட்டிக் கொடுக்கும் மனசுதான் காரணம். சுருக்கமாகச் சொன்னால், கடை ஏழு வள்ளல் என்பார்கள். இவர் நம் காலத்தில் நம் கண்முன்னால் வாழும் வள்ளல்.

இவர் தனது 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு எழுதிக் கொடுத்த செய்தி, சில தொலைக்காட்சிகளில் செய்திக்காக வெளியானது. அந்தச் செய்தி குறித்து எந்தப் பெருமையும் இல்லாமல் ஊரில் தனது வாழ்க்கை யை சகஜமாக நடத்திக் கொண்டிருந்த ஆயி பூரணம் அம்மாளைச் சந்திக்க எம்.பி. சு. வெங்கடேசன் விரும்பி இருக்கிறார்.
அதற்காக அவரை தொலைபேசியில் அழைத்துச் சந்திக்க வரலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், பூரணம் அம்மாளுக்கு சு.வெங்கடேசனைத் தெரியாது. அவர் எம்.பி என்பது தெரியாது.
ஆகவே மாலை ஆறு மணிக்கு மேல் வாருங்கள். நான் வங்கியில் பணியில் இருக்கிறேன். அது முடிந்தால்தான் உங்களிடம் பேச முடியும் என்று சொல்லி இருக்கிறார். அழைப்பைத் துண்டித்துவிட்டு தகவலை உறவினர்களிடம் கூறிய போதுதான் பேசியது எம்.பி என்பது அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது. அசந்து போனார் பூரணம் அம்மாள். அடுத்த நாள் அவரது வங்கிக்குச் சென்று பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சு. வெங்கடேசன்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், “நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடனையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் இராஜேந்திரன் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.
இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும்.
நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தைக் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராகத் தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்!
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது.
இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தைக் குணத்தைக் கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன். உடன் கனரா வங்கியின் வட்டார மேலாளர் சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த அம்மாளைப் பற்றிய செய்தி வெளியான நாள் முதலே அவரை சமூக ஊடகம் கொண்டாடி வருகிறது. ஆனால், அந்தப் புகழ் வெளிச்சம் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் வேலையை வங்கியில் செய்து வருகிறார் இந்தக் கொடை வள்ளல்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications