Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

க்ளவுஸ், மாஸ்க் கூட இல்லை.. கச்சா எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் மனித உரிமை மீறல்! எண்ணூரில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணியில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

Poovulagin Nanbargal Group Alleges Violation of Human Rights in Ennore Disaster Reconstruction

ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதனையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது "எண்ணெய் கசிவு நடந்து 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தி அளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா?" என்று கேள்வியெழுப்பி, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொடங்கியது. ஆனால் இந்த பணியில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

அதாவது, "கழிமுகத்தில் தேங்கிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிந்த நிகழ்வே மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் துச்சமெனக் கருதியதால்தான். அப்பேரிடரை மறுசீரமைக்கும் பணியில் இப்படி ஒரு மனித உரிமை மீறல் நடப்பது கண்டனத்திற்குரியது. இதுவா போர்க்கால அடிப்படையில் எண்ணெய் கழிவை அகற்றுவது?" என்று x சோஷியல் மீடியா தளத்தில் பூவுலகின் நண்பர்கள் குழு கேள்வியெழுப்பி உள்ளது.

கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட இந்திய கடற்படை, சுமார் 20 ச.கி.மீ பரப்பளவில் கழிவுகள் பரவியிருப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+