வடசென்னை சிங்கம் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இரட்டை இலை சின்னத்தில் போட்டி? எடப்பாடி பிளான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இரட்டை இலை சின்னத்தில், வடசென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட வடசென்னை தொகுதியில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதிமுகவுடன் பொற்கொடி கூட்டணி வைத்து போட்டியிடுவதாகவும் சொல்லப்பட்டது.
இதற்காக எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பொற்கொடிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னையில் எந்த தொகுதி என்பது சரிவர தெரியவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் பிரபல முகமாக பொற்கொடி இருப்பார் என சொல்லப்படுகிறது.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் , கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆவார்.
ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்குப் பிறகு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநிலத் தலைவர் ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, இவரைப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.
தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 5, 2025 அன்று, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Maanila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தற்போது தனது புதிய கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தனது கணவரின் படுகொலைக்கு நீதி கோரியும் பொதுவாழ்வில் இயங்கி வருகிறார்.
-
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications