Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்.. அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்க போறீங்களா? அப்ப இதை நோட் பண்ணிக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வங்கிகளில் உள்ள வட்டி விகிதங்களை ஆராய்ந்து பார்த்து தான் அவற்றை தேர்வு செய்கின்றனர்... அதில் ஒன்றுதான், அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டம்.. இதில் பலரும் இணைந்து பலன்களை பெற்று வருகின்றனர்.. என்ன காரணம்?

வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். தபால் நிலையங்களிலேயே சிறுசேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றன.

Post Office Savings Account Scheme benefits and What are the Procedures in this Post Office scheme

அதில் ஒன்றுதான், தபால் அலுவலக சேமிப்பு திட்டமாகும்.. இந்த சேமிப்பு திட்டத்தில் 4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை துவங்க வேண்டுமானால், குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்தால் போதும்.. அதாவது, நாம் வங்கியில் எப்படி மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கிறோமோ, அதுபோல, போஸ்ட் ஆபீஸிலும், இந்த தபால் நிலைய சேமிப்பு கணக்கில் ரூ.500 எப்போதுமே இருக்க வேண்டும்.

நன்மைகள்: ஒருவேளை இந்த மினிமம் பேலன்சை, நீங்கள் கவனிக்காமல் எடுத்துவிட்டால் அல்லது பராமரிக்க தவறிவிட்டால் அதற்கு உங்களிடம் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தினால், பாதுகாப்பு கிடைக்கிறது.. உத்தரவாதம் கிடைக்கிறது.. வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.

யார் யார் சேரலாம்: இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.. அனைத்து வயது பிரிவினருக்குமே தகுதி உள்ளது.. வருமான வரி சட்டம் பிரிவு 80TTA இன் கீழ் 10,000 ரூபாய் வரை வட்டி தொகை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சான்றிதழை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ பாஸ்புக் வழங்குவதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்...

அதேபோல, கணக்கு பரிமாற்றம் மற்றும் கணக்கு உறுதிமொழி கட்டணம் ஒவ்வொன்றும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். காசோலையை தவறாக பயன்படுத்தினால் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் செக் புக் பெற வேண்டுமானால், ரூ.50 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்: அஞ்சலக சேமிப்புக் கணக்கு திட்டத்தில் காசோலை, ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் இணைப்பு, அடல் பென்சன் திட்டம், சுரக்‌ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதேபோல, இந்த திட்டத்தில், நினைத்த நேரத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. மிகவும் பாதுகாப்பாகவும், உபயோகமாகவும் இருக்கும் இந்த சேமிப்பு கணக்கில் பலரும் கணக்கு தொடங்கி வருகின்றனர்.

ஆவணங்கள்: தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் கணக்கினை தபால் நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்..

குறிப்பாக, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் தேவைப்படும். வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+