சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், தாம்பத்தில் நாளை பவர் கட்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் தாம்பரம், பல்லாவரம், அடையாறு, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ள இடங்களின் விவரங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அடையாறு, கோட்டூரபுரம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மாதம் ஒரு முறை எல்லா ஊரிலும் பழுதான மின்வயர்களை மாற்றுவது, பழுதான அல்லது சேதமடைந்த மின் மாற்றிகளை மாற்றுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் . டிரான்ஸ்பார்மர்களில் மற்றும் மின் வழித்தடங்களிலும் துண மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.இது பற்றி முதல் நாளே மின்வாரியம் அறிவித்துவிடும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படும் மின்சார தடை குறித்து https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml இணையதளத்தில் தினமும் வெளியிடப்படும் . அதில் உங்கள் ஊரில் நாளை மறுநாள், நாளை மின் தடை உள்ளதா என்பதை அறியலாம். நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையல், சென்னையில் 25.06.2025 அன்று (நாளை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்பட இருக்கிறது.
தாம்பரம்
சிட்லபாக்கம் ஆத்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியர் காலனி, சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையின் ஒரு பகுதி, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யா சாமி தெரு.
அடையாறு
மல்லிப்பூ நகர், 1 முதல் 3வது பிரதான சாலை காந்தி நகர் பகுதி.
கோட்டூர்புரம்
ஸ்ரீ நகர் காலனி, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோயில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6வது தெரு வரை.
பல்லாவரம்
சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை முதல் பல்லாவரம் பேருந்து நிலையம் வரை, சைதன்யா பள்ளி, அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேரி துர்கா நகர் வீட்டு வசதி வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தாகூர் தெரு, வள்ளலார் தெரு, கம்பன் தெரு, காமராஜர் தெரு, காந்தி தெரு, காமட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஆர்.கே.வி.அவென்யூ, அருள் முருகன் நகர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications