பகலில் தண்ணீர் பிரச்சினை.. இரவில் மின்வெட்டு.. என்னதான் செய்வார்கள் சென்னைவாசிகள்?
Recommended Video
சென்னை: தண்ணீர் பிரச்சினையை தொடர்ந்து தற்போது மின்வெட்டு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர்.
கத்தரி வெயில் முடிந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதிலும் சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிநீருக்காக அல்லோகலப்படுகின்றனர்.

தமிழகமே தேடி அலைகிறது
பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தூக்கத்தை இழந்து தண்ணீருக்காக தேடி அலைகின்றனர். பகல் நேரம் அல்லாது இரவு நேரங்களிலும் தண்ணீர் தேடி அலைந்தால்தான் பகல் நேரத்தில் குழந்தைகள் பள்ளிச் செல்லவும், பெரியவர்கள் வேலை செல்லவும் ஏதுவாக இருக்கும் என்பதால் தண்ணீருக்காக இரவு நேரம் என்றும் பாராமல் தமிழகமே தேடி அலைகிறது.

மின்வெட்டு
தண்ணீர் பிரச்சினை ஒருபுறம் இருக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மணிக்கணக்கில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

வெயிலில் வெம்பி தவிக்கும் மக்கள்
சில சமயங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை இயக்க முடியவில்லை. ஏற்கெனவே வெயிலில் வெம்பி தவிக்கும் மக்கள் இந்த மின்வெட்டால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

கருணை
சென்னை வேளச்சேரி, வில்லிவாக்கம், சூளைமேடு, சைதாப்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சத்தால் நொந்து தவிக்கும் மக்கள் இந்த மின்வெட்டு பிரச்சினைகளால் தூக்கத்தையும் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். இன்னும் சிலர் தண்ணீர் பிரச்சினைக்காக வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு வருண பகவான் கருணை காட்டினால்தான் உண்டு.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications