“CCTV கேமராக்களை வைப்பதற்கு முன் வாக்களிக்கும் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா?" பிரகாஷ்ராஜ் கேள்வி!
சென்னை: "நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை" என நடிகர் பிரகாஷ் ராஜ், தலைமை தேர்தல் ஆணையருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு விவகாரத்தில், "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் பிரகாஷ் ராஜ் பதில் அளித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பீகாரில் 'வாக்காளர் அதிகார நடைபயணம்' தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து பின்வாங்காது. வாக்கு திருட்டு போன்ற முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்." என்றார்.
மேலும், "மின்னணு வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, இது வாக்காளர் தனியுரிமையை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் 2019 இல் கூறியது. சில நாட்களுக்கு முன்பு பல வாக்காளர்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடப்பட்டதை பார்த்தோம். தேர்தல் ஆணையம் எந்த வாக்காளரின் சிசிடிவி காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?
மக்களவைத் தேர்தலுக்காக 1 கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் லெவல் முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பணிபுரிந்தனர். இவ்வளவு வெளிப்படையான செயல்முறையுடன், இவ்வளவு மக்கள் முன்னிலையில் யாராவது வாக்குகளைத் திருட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையருக்கு கேள்வி எழுப்பியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் அந்தப் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை" எனத் தெரிவித்துள்ளார்.
-
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
வாக்காளர்கள் மொபைல் போன்களை வைத்து செல்ல வாக்குச்சாவடியில் தனி வசதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு -
மைனாரிட்டி திமுக டூ தொடர்ந்து வென்ற அதிமுக.. தமிழகத்தில் கடைசி 5 தேர்தல்களில் என்ன நடந்தது? டேட்டா -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
கடந்த முறை 8 கட்டங்களாக.. இந்த முறை 2 கட்டங்களாக தேர்தல்.. மேற்கு வங்கத்தில் அதிரடி மாற்றம் ஏன்? -
ஏப்ரல் 9ல் கேரளா சட்டசபை தேர்தல். மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.. அறிவித்த தேர்தல் ஆணையம் -
2021-ல் சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெற்றது தெரியுமா? இதோ விவரம்! -
EVM-யில் வேட்பாளரின் போட்டோ இடம்பெறும்.. சட்டசபை தேர்தலில் புதிதாக அமல் - அறிவித்த தேர்தல் ஆணையம் -
வீதியில் இறங்கிய மம்தா.. முதல் நாளே அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. என்ன நடக்கிறது? -
5 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமல்ல.. 6 மாநில இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது தேர்தல் ஆணையம் -
Puducherry Assembly election 2026: புதுவை சட்டமன்ற தேர்தல் ஏப்.9 ஆம் தேதி நடைபெறும்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு -
"மம்தா vs மோடி.." மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை












Click it and Unblock the Notifications