ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்கது.. விஜய்க்குதான் மக்கள் ஆணை கிடைச்சது! பிரகாஷ்ராஜ் சப்போர்ட்
சென்னை: விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அருவருக்கத்தக்கது எனவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். விஜய்யை அரசியல் களத்தில் கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே நொடிக்கு நொடி பரபரப்பாக நகர்ந்து வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதே தவிர ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண் இல்லை.

திண்டாடும் தவெக
108 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் மொத்தம் 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏக்கள் தேவை. தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகியுள்ள போதிலும் இந்த எண்ணை பெற தவெக கடும் பாடுபடுகிறது.
விஜய்க்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு
இதற்கிடையே தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் விஜய் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இரன்டாவது முறையாக இன்றும் விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார். தனிப்பெரும் கட்சியாக தவெகவை ஆட்சி அமைப்பதே அரசியல் அமைப்பு படி ஆளுநரின் கடமை என்றும் அதை மீறும் எதேச்சதிகார செயல்பாடு எனவும் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜ் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- ஆளுநரின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
அரசமைப்புக்கு எதிரானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட விஜய்க்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின் போது விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிரகாஷ் ராஜ் முன்வைத்து இருந்தார். திமுகவிற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பிரசாரம் செய்து வந்த நிலையில், தற்போது ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications