திடீர் திருப்பம்.. கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் அதிரடி சந்திப்பு.. மநீமவை தூக்கி நிறுத்துவாரா?
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கமல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பாரம்பரிய கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி 12 இடங்களில் 3-ஆவது இடத்தை பிடித்து சாதனை பெற்றது. வாக்குச் சதவீதமும் அதிகரித்தது. மொத்தமாக 16 லட்சம் வாக்குகளை அள்ளி குவித்தது.

மக்கள் நீதி மய்யம்
தோற்றாலும் நிச்சயம் துவண்டு போக மாட்டோம். மீண்டும் எழுந்து நிற்போம் என கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளது.

கணிசமான வெற்றி
இந்த முறை வாக்கு சதவீதத்தை மட்டுமே அதிகரிக்காமல் வெற்றியை நோக்கி பயணம் செய்ய கமல் முடிவெடுத்துவிட்டார். இந்த தேர்தல்களில் கணிசமான வெற்றியை பிடித்து தாங்கள் யார் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்.

ஆலோசனை
அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தலிலும் வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யம் அணுகியது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜெகன் பெரும் வெற்றி
பிரசாந்த் கிஷோர் முதல்வர்களாக நரேந்திர மோடி, நிதிஷ்குமார் ஆகியோருக்கும் பிரதமராக மோடிக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளார். அண்மையில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கா வியூகம் வகுத்து கொடுத்ததில் ஜெகன் பெரும் வெற்றி பெற்றார். இத்தகைய பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அணுகியுள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications