தேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்!
Recommended Video

சென்னை: தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுகி நிறுவனத் தலைவராக விஜயகாந்த் நீடித்து வருகிறார். விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில்தான் அரசியலில் இறங்கினார். இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்கு பதவி கிடைத்துள்ளது.
சென்னையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

பதவி இல்லாமல் வலம்
தேமுதிக ஆரம்பித்தது முதல் எந்தப் பதவியும் வகிக்காமல் கட்சியில் வளைய வந்தார் பிரேமலதா. இருப்பினும் கட்சியின் முக்கியமான பிரச்சார பீரங்கியாக திகழ்ந்து வந்தார் பிரேமலதா

முக்கிய பிரசார பீரங்கி
ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த்துக்கு சமமாக ஊர் ஊராக போய் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தவர் பிரேமலதா. கட்சியில் அவரின்றி எதுவும் இல்லை என்ற அளவுக்கு முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

சுதீஷ் இளைஞர் அணி
பிரேமலதாவின் தம்பி சுதீஷ் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இந்த மூவரும்தான் தேமுதிகவின் முகமாக திகழ்ந்தனர். இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்கு முதல் முறையாக பொருளாளர் பதவி கிடைத்துள்ளது.

மகனும் அரசியலில்
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில்தான் தீவிர அரசியலுக்கு வந்தார். கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். விஜயகாந்த்துக்குப் பதில் இவர்தான் தீவிரமாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு அல்லது துணைத் தலைவர் பதவி தரப்பட வேண்டும என்ற கோரிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குழல் துப்பாக்கி போல
தற்போது விஜயகாந்த் சுகவீனமாக உள்ளதால், பிரேமலதா விஜயகாந்த்தும், அவரது மகன் விஜய பிரபாகரனும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல தேமுதிகவின் உயர்வுக்கு பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications