நல்லா விசாரிச்சுப் போடுங்க.. நான் முயற்சிக்கவே இல்லை.. அதெல்லாம் கிடையாது.. பிரேமலதா பொளேர்!
சென்னை: சசிகலாவை சந்திக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டணி குறித்து சுதீஷ் ஒன்று பேசுகிறார், விஜய பிரபாகரன், பிரேமலதா என ஆளாளுக்கு ஒரு கருத்தை பேசி வருகிறார்கள்.

234 தொகுதிகள்
அதில் பிரேமலதா கூறுவது, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றே சில தினங்களாக கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கேப்டன்
இதுவரை நம்மை வைத்து ஆட்சி அமைத்தவர்கள் எல்லாம் நம்மை மதிக்க மறுக்கிறார்கள். கேப்டன் கை காட்டுபவர்தான் இதுவரை முதல்வராகியுள்ளார்கள். இனியும் கேப்டன் சொல்பவர்தான் முதல்வராக முடியும் என்பதுதான் உண்மை. இதை ஆண்ட கட்சிகள் மறுக்க முடியாது. விரைவில் கேப்டனை தேடி வருவார்கள்.

தமிழில் பிடிக்காத வார்த்தை
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை கூட்டணி. அதிமுக, திமுகவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிரேமலதா பேசியிருந்தார். அதிமுகவை விமர்சித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிடிக்காத சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால்தான் முதல்வர் ஆனார் என்றெல்லாம் பேசியிருந்தார்.

முற்றிலும் தவறு
அதிமுக கூட்டணி பேரத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால் சசிகலாவை பாராட்டி அவர் பக்கம் துண்டை போட்டு வைத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சசிகலாவை சந்தித்த பிரேமலதா நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இதுபோன்ற செய்திகளை எங்களிடம் விசாரித்து விட்டு போடுங்கள். இது முற்றிலும் தவறானது. நாங்கள் சசிகலாவை சந்திக்க முயற்சிக்கவே இல்லை என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications