காரியம் ஆனதும் காலை வாரும் பிரேமலதா .. போகிற போக்கில் அதிமுக மாஜி எம்பிக்கள் மீது விமர்சனம்
சென்னை: கடந்த 5 ஆண்டுகள் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை. எனவே இம்முறையும் கிடைக்க போவதில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. ஆயினும் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் சென்னையில் திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா சந்தித்தார்.

கிடைக்கவில்லை
அப்போது அவர் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை. அது போல் இந்த 5 ஆண்டுகளுக்கும் எந்தவித பலனும் தமிழகத்துக்கு கிடைக்க போவதில்லை.

வாக்கு சதவீதம்
இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏன் என தெரியவில்லை. தேர்தலில் கடந்த இரண்டு முறை தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால் சின்னம் முடக்கப்படாது.

தமிழகம்
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்றார் பிரேமலதா. இந்த பேட்டியில் சந்தடி சாக்கில் அதிமுக, பாஜகவை பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணி அமைவதற்கு முன்னர் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக எம்பிக்களால் எந்த நன்மையும் தமிழகத்துக்கு இல்லை என்று கூறினார்.

சலசலப்பு
இதைத் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைந்தவுடன் இதை தான் ஏன் தெரிவித்தார் என்ற பூசி மெழுகும் காரணத்தை கூறினார பிரேமலதா. இந்த முறை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் எம்பிக்களையும் பாஜக அரசையும் விமர்சனம் செய்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications