நாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா
Recommended Video
சென்னை: நாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில் விஜயகாந்தை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோடை கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரச்சாரம்
அவர் கூறுகையில் தேர்தலுக்கு பிறகு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மக்கள் பணியில் முழு கவனம் செழுத்துவார்கள். மோடி அரசு மீண்டும் மத்தியில் ஆளும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தொடரும். தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவுகள் அறிவித்தால் இந்த குழப்பம் இருக்காது. இத்தனை நாட்களாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பிரச்சாரம் செய்து வந்தனர்.

நிலத்தடி நீர்
எப்போதுமே கிளைமேக்ஸில் பிரச்சாரம் செய்தால்தான் ரீச்சாகும் என்பதால் நான் நாளை முதல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளேன். தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இருந்து வருகிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது.

தூர்வார்தல்
தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். தமிழகத்திலுள்ள நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழைநீர் தேங்க வழி செய்ய வேண்டும். மேலும் நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார் பிரேமலதா.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications