விஜயகாந்துக்கு 10 வருஷ ட்ரீட்மெண்ட்! நான் பாதி டாக்டராகி விட்டேன்! பிரேமலதா சொன்ன ருசிகரத் தகவல்!
சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தாம் பாதி டாக்டராகி விட்டதாகவும், டாக்டருக்கு தெரியும் எல்லா விஷயங்களும் தனக்கு முக்கால்வாசி தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.
தனக்கு பல்ஸ் பார்க்கத் தெரியும், ஆக்ஸிஜன் பார்க்கத் தெரியும், சர்க்கரை அளவு பார்க்கத் தெரியும், ஐசியூவில் ஓடிக்கொண்டிருக்கும் மானிட்டர் பார்க்கத் தெரியும் எனக் கூறியுள்ளா பிரேமலதா விஜயகாந்த், தனது கணவரை 10 ஆண்டுகளாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தாம் முக்கால் டாக்டராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிழைக்கமாட்டார் என அவர் உயிர் பிரிவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் மருத்துவர்கள் தன்னிடம் கூறிய போது, பல்ஸ், ஆக்சிஜன் என எல்லாமே நல்லாயிருக்கிறதே, பிறகு ஏன் அவர் பிழைக்கமாட்டார் என்கிறீர்கள் என தாம் மருத்துவர்களிடம் கேட்டதாகவும் வெண்டிலேட்டரில் இருப்பதால் எல்லாம் நல்லாயிருப்பது போல் காட்டுகிறது, மற்றபடி அவர் உடலில் எதுவும் இல்லை என டாக்டர்கள் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
எத்தனையோ மருத்துவமனைகள், எத்தனையோ மருத்துவர்கள் என 10 ஆண்டுகளாக விஜயகாந்தை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதை நினைவுப்படுத்தி பேசிய அவர், இனி தன் வாழ்நாளில் கல்யாண நாள் என்பதே கிடையாது என்றும் திருமண நாள் அன்று தாம் அலுவலகத்துக்கு வரமாட்டேன் எனவும் அன்றைய நாள் யாரையும் சந்திக்க மாட்டேன் எனவும் அழுதுகொண்டே தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.
விஜயகாந்துகாக சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், இன்னும் ஓரிரு வாரங்களில் கிராமம் கிராமமாக தாம் பயணிக்க தொடங்கிவிடுவேன் என்று பேசி திமுகவைவும் சைலண்டாக சாடினார். ராஜாஜி ஹால் கேட்கவில்லை என ஏதோதோ யார் யாரோ பேசுகிறார்கள் என்றும் ராஜாஜி ஹாலில் விஜயகாந்தின் உடலை வைக்க தாங்கள் அனுமதி கேட்டதாகவும் ஆனால் பதிலே வரவில்லை எனவும் பிரேமலதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications