Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த "வசதி".. ப்ரீபெய்டு ஆட்டோ சேவை.. 1 கி.மீட்டருக்கு எவ்ளோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புது வசதி ஒன்று பயணிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

கடந்த வருடமே திறந்திருக்க வேண்டிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம், இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.. இந்த ஒரு வருட காலமாகவே சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி பணிகள் நடந்தன. ஆனாலும் முழுமையான வசதிகள் இன்னும் இந்த ஸ்டாண்டில் அமைக்கப்படவில்லை என்கிறார்கள்..

Prepaid auto service at Kilambakkam kalaignar centenary Bus terminus and and Do you know the Auto Service Fare

பஸ் முனையம்: கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனை திறந்தபிறகு, பஸ் ஸ்டாண்டை திறந்திருக்கலாமே? இவ்வளவு சீக்கிரம் பஸ் முனையத்தை திறந்துவிட்டால், வடசென்னை உள்ளிட்டவர்கள் எப்படி கிளாம்பாக்கம் வர முடியும்? மெட்ரோ வசதி இல்லாதவர்கள் எப்படி கிளாம்பாக்கம் வர முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

அடிப்படையான மேலும் சில வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன..

ரயில்வே ஸ்டேஷன்: கிளாம்பாக்கத்தில் இறங்கினால், பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குறைந்தது ஒன்றரை கிலோமீட்டருக்கு போக வேண்டியிருக்கிறது.. கையில் மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் அவ்வளவு தூரம் செல்லவும் முடிவதில்லை.. அதுமட்டுமல்ல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ சேவை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக ப்ரீபெய்டு ஆட்டோ வசதி தொடங்கப்பட்டுள்ளது... பயணிகளின் நலன் கருதி ப்ரீபெய்டு ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. இந்த சேவை சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.

ஆட்டோ தேவை: கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகள் பஸ்களிலிருந்து இறங்கியவுடன் ஆட்டோ தேவைப்படுகிறது.. இவர்களுக்கு ப்ரீபெய்டு ஆட்டோ சேவை மையத்தில் எந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதை தெரிவித்தால் நிர்வாகமே ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 வீதம் வாடகை நிர்ணயம் செய்து ஆட்டோ புக்கிங் செய்து தந்து வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, உரிய நேரத்தில் ஆட்டோ நேரடியாக வந்து பயணிகளை அழைத்து செல்லும்விதமாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் இணைவதற்கு 18 ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,400 ஆட்டோவிற்கான ஆவணங்களை வைத்து மனு அளித்திருந்தனர். அதில், 194 ஆட்டோக்களை தேர்ந்தெடுத்து இந்த ப்ரீபெய்டு ஆட்டோ சேவை துவங்கப்பட்டிருக்கிறது.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் செயல்படுவதைபோலவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலும் ப்ரீபெய்டு சேவை துவங்கப்பட்டு உள்ளது, பயணிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

ப்ரீபெய்டு ஆட்டோ: முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் வசதிக்காக பிரீபெய்டு ஆட்டோ சேவையை உடனடியாக துவங்க வேண்டும் என சிஎம்டிஏ மற்றும் போக்குவரத்து துறைக்கு தமிழக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலர் எம்.ஜி. அழகேசன் மனு அளித்திருந்திருந்தனர்..

கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு சேவையில் இணையும் ஆட்டோ தொழிலாளிகளுக்கு உரிய அதிகாரிகள் கையெழுத்துடன் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் ஆட்டோ இயக்க, 1,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+