Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடிக்கு பிடித்த 4 விளையாட்டுக்கள்.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே! மன் கி பாத்தில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனக்கு 4 விளையாட்டுக்களை பிடிக்கும் என்று கூறி மனதில் குரல் உரையில் பேசி இருக்கிறார். அந்த 4 விளையாட்டுக்கள் எவை?

இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மனதின் குரல் பகுதிகளில் நாம் நமது இளைய தலைமுறையினரின் திறமைகளைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். இன்று, விளையாட்டுத் துறை என்பது, நமது இளைய விளையாட்டு வீரர்கள் புதிய புதிய வெற்றிகளைத் தொடர்ந்து ஈட்டி வரும் ஒன்றாகும்.

 Prime Minister Narendra Modi has said that he likes 4 sports

ஒரு போட்டியிலே, நமது விளையாட்டு வீரர்கள் தேசத்தின் கொடிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சில நாட்கள் முன்பாக சீனாவில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்கள் நடந்தன. இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்த முறை பாரதம் இதுவரை நிகழ்த்திராத சாதனைச் செயல்பாட்டினைப் புரிந்திருக்கிறது.

நமது விளையாட்டு வீரர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், இதிலே 11 தங்கப் பதக்கங்கள். 1959 முதல் இன்று வரை எத்தனை உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கின்றனவோ, அவற்றில் பெற்ற அனைத்துப் பதக்கங்களைக் கூட்டினாலும் கூட, மொத்தம் 18 தான் வருகிறது.

இத்தனை தசாப்தங்களில் வெறும் 18 மட்டுமே; ஆனால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள், 26 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வகையிலே, உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இளைய வீரர்கள், மாணவர்கள் சிலர் இப்போது தொலைபேசி வாயிலாக என்னோடு இணைந்திருக்கிறார்கள்.

நான் முதன்மையாக இவர்களைப் பற்றி உங்களிடம் கூறி விடுகிறேன். யுபியில் வசிக்கும் பிரகதி, வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். அசாம் மாநிலத்தில் வசிக்கும் அம்லான், தடகளப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். யுபியில் வசிக்கும் பிரியங்கா ரேஸ் வாக், அதாவது நடைப்பந்தயப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த அபிதன்யா துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறார்." என்று கூறிய மோடி இந்த 4 பேரிடமும் கலந்துரையாடினார்.

அப்போது தடகள வீரர் அம்லான், உங்களுக்கு எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "விளையாட்டு உலகத்தில பாரதம் பெரிய மலர்ச்சியை அடைய வேண்டும். இதற்காக நான் இந்த விஷயங்களுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் ஹாக்கி, கால்பந்தாட்டம், கபடி, கோகோ, இதெல்லாம் நம்ம மண்ணோட இணைந்த விளையாட்டுக்கள், எப்போதுமே, நாம் இதில் பின்தங்கி இருக்கக் கூடாது. அதே போல வில்வித்தையிலும் நம் வீரர்கள் நன்றாக செயல்படுவதை நான் கவனிக்கறேன். அதே போல் துப்பாக்கிச் சுடுதலிலும். இரண்டாவதாக நான் என்ன பார்க்கறேன் என்றால், நம் இளைஞர்கள், ஏன் குடும்பங்களிலும் கூட விளையாட்டுக்கள் மேல முதலில் இருந்த கருத்தும் உணர்வும் இப்போது இல்லை.

முன்பு எல்லாம் குழந்தைகள் விளையாடப் சென்றால் அதை தடுப்பார்கள். ஆனா இன்று காலம் ரொம்ப மாறிவிட்டது. நீங்கள் எல்லாரும் வெற்றி மேல வெற்றியை குவிக்கறீர்கள். இது, எல்லா குடும்பங்களுக்கும் கருத்து ஊக்கமாக அமைகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும், எதில் எல்லாம் நம் குழந்தைகள் பங்கெடுக்கிறார்களோ, அதில எல்லாம் ஏதோ ஒன்றை ஜெயித்து வருகிறார்கள்.

மேலும் இந்தச் செய்தி முக்கியச் செய்தியாக நாட்டு மக்களிடம் கொண்டு போயும் சேர்க்கப்படுகிறது, கண்ணுக்குத் தெரியும் வகையில காட்டப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் விவாதப் பொருளாகிறது. சரி, எனக்கு உங்களோடு பேசியது மிகவும் நன்றாக இருக்கிறது. என் தரப்பில் இருந்து உங்கள் எல்லாருக்கும் பல பல பாராட்டுக்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+