வேஷ்டி சட்டையில்... நேரு ஸ்டேடியத்தில் மாஸ் என்டரி கொடுத்த பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்காக நேரு ஸ்டேடியம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல்முறையாக, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இன்று முதல் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டியில் தொடக்க விழா இன்று சென்னை நேரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முதலில் குஜராத்தில் இருந்து மாலை 4.45க்கு சென்னை வர இருந்தார். இருப்பினும், சற்று தாமதமாக மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்
அதன் பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்கரை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பிரதமர் நரேந்திர மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
வழி நெடுகிலும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து கை அசைத்தபடி உற்சாகமாகப் பிரதமர் மோடி நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
செஸ் ஒலிம்பியாட் 2022க்காக பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வெட்டி, சட்டையில் பங்கேற்று உள்ளார். குறிப்பாகச் சதுரங்க கட்டம் போட்ட கரை வேஷ்டி சட்டையைப் பிரதமர் மோடி அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications