சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது
Subscribe to Oneindia Tamil
Recommended Video
கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்தது
சென்னை: சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த வினு அஜய் உள்ளிட்ட மாணவர்கள் ஒரு காரில் சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பக்கிங்ஹாம் கால்வாய் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் நிலை தடுமாறி பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாயந்தது. இதில் கார் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கியது. கால்வாயில் கார் மூழ்கிய நிலையில் காரின் கதவை திறந்து மாணவர்களே வெளியேறியதுடன், காரை கிரேன் உதவியுன் மீட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பிற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க மாணவர்களே காரை கால்வாய்க்குள் திருப்பியதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications