கடும் மனஉளைச்சல்.. லோன் வாங்கி கட்ட முடியாமல்... கதறி உயிரைவிட்ட ஊழியர்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் ரூ.6 லட்சம் வாங்கிய நிலையில் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏராளமான மக்கள் கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். வேலை செய்வோர் என்றால் வேலையை இழந்தும், சுயதொழில் செய்வோர் என்றால் வருமானத்தை இழந்தும் தவித்து வருகிறார்கள். அதில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.

மன உளைச்சல்
6 மாதம் முற்றிலும் வருமானத்தை இழந்த மக்கள், அந்த 6 மாத வருமானத்தை ஈடுகட்ட பலருக்கும் இன்னும் ஓராண்டு வரை கூட ஆகும் நிலை உள்ளது. இதுவே எதார்த்தம். இந்த சூழலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி கடனை அடைக்க முடியாமல் கடும் மனஉளைச்சலில் பலர் தவிக்கிறார்கள். அதில் சிலர் விபரீதமான முடிவையும் எடுத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

பெரவலூர் அருகே
சென்னை பெரவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகர் முதல் சர்குலர் சாலையில் வசித்து வந்தவர் வசந்தகுமார் வயது 59. இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

பர்சனல் லோன்
வசந்தகுமார் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வசந்தகுமார் இரண்டு வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் மேலும் ஒரு வங்கியில் பர்சனல் லோன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்ட சொல்லி தொல்லை
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்ததால் வசந்தகுமார் தவணையை சரியாக கட்டவில்லை. வங்கிகளால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் தொடர்ந்து வசந்தகுமாரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்தார்களாம்.

தூக்குபோட்டு தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த வசந்தகுமார் நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெரவள்ளூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications