பிரியா எலும்புல "ஓட்டை".. ஸ்குரூ போட்டாங்க.. அந்த டாக்டர் பேர் என்ன.. போலீசாரை திணறடித்த மாணவர்கள்
பிரியாவின் சடலத்தை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது
சென்னை: பிரியாவுக்கு ஆபரேஷன் செய்தபோது, காலில் எதற்காக ஸ்க்ரூ போட்டனர்? டாக்டர் பேர் என்ன? ஏன் மறைக்கிறீங்க? என்று போலீசாரை உறவினர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவுக்கு, கால்பந்து மீது தனி ஆர்வம் இருந்தது.. ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தி வந்தார்.
அதனாலேயே, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் இவருக்கு நிறைய கிடைத்தன.. இந்த சூழலில் பிரியா மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்படவும், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.'

அட்வைஸ்
அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக டாக்டர்கள் சொல்லியதுடன், ஆபரேஷனும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்.. அதன்படியே ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதையடுத்து, வலது கால் அகற்றப்பட்டது... எனினும், தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யோ பிரியா
பிரியாவின் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்களும், தோழிகளும், மாணவர்களும், மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினர்... அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.. மேலும் தவறான சிகிச்சை குறித்து பேச முயன்றபோது, உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.. "ஆபரேஷன் செய்தது யார்? டாக்டர் பேர் சொல்லுங்க? ஏன் சார் டாக்டர் பேரை சொல்ல மாட்டேங்கறீங்க? ஏன் மறைக்கிறீங்க? பாப்பா உயிர் போயிருச்சே, இப்பவும் மறைச்சா எப்படி? எங்ககிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு..

எலும்புகள்
எதுக்காக எலும்புகளில் போல்ட், ஸ்க்ரு போட்டிருக்காங்க.. அந்த எக்ஸ்ரே எங்க கிட்ட இருக்கு.. அதை கூட உங்களிடம் காட்டறோம்... அந்த ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி மருந்தை வாங்கிட்டு வர சொன்னாங்க.. அந்த பில்லையும் நாங்கள் காட்டறோம்.. இவ்வளவு தப்பு நடந்திருக்கு.. எதுவுமே பேச மாட்டேங்கறீங்க.. ஆபரேஷன் செய்த கேஸ் ஷீட் எங்கே?" என்று கதறி போலீசாரிடம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.. இதனிடையே, பிரியாவின் அண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடைசியாக கூட என் தங்கச்சி முகத்தை பார்க்கலயே என்று அழுது கொண்டே சொன்னார்.

ஹோல்ஸ்
"ஆசை ஆசையா ஜெர்சி கேட்டா.. சதைய கிழிச்சு சாவடிச்சிட்டாங்க.. எனக்கு போன் பண்ணி பேசினாள், அண்ணா எனக்கு ஒன்னுமே ஆகல.. நீ ஏன் பயப்படறே?ன்னு சொன்னாள்.. உன் பொறந்த நாளைக்கு என்ன வேணும்னு நான் கேட்டேன்.. பூட்ஸ் மட்டும் வாங்கிக் குடு-ன்னு கேட்டாள்.. சரிம்மா, நீ நல்லாயிட்டு வந்துடுன்னு சொன்னேன்.. அதுக்கப்பறம்தான் ஆபரேஷன் நடந்துருக்கு.. பாப்பாவுக்கு ஒன்னுமில்லை, மைக்ராஸ்கோப்புன்னு ஒன்னு வந்திருக்கு, அதில் லைட்டா ஹோல் போடணும்னு சொன்னாங்க.. அந்த ஹோல் அதுக்கப்பறமா, அதுவாகவே மூடிக்கும்ன்னு சொன்னாங்க.. ஒரு மணி நேரத்தில் ஆபரேஷனும் முடிஞ்சிடும்னு சொன்னதால் நம்பிக்கையா இருந்தோம்..

சர்ஜரி
ஆனால், 4 மணி நேரம் கழித்துதான் கூட்டிட்டு வந்தாங்க.. கால்ல ரத்த ஓட்டமே வரல.. ராத்திரிதான் ஆம்புலன்ஸில் ஜிஹெச்சுக்கு அனுப்பி வெச்சிட்டாங்க.. கடைசியில் ஜிஎச் வந்து பார்த்தால், கால் முழுக்க அழுகிட்டு இருக்கு.. அப்பதான் சர்ஜரின்னு சொன்னாங்க.. கால் போனால் பரவாயில்லை, உயிராவது கிடைக்கட்டும் என்று நினைத்தோம்.. ஐசியூவில் கூட பார்க்க முடியல" என்று தேம்பி தேம்பி அழுதார்.. இதனிடையே, பிரியாவின் சடலத்தை பார்த்து மாணவிகள் கதறி அழுதது காண்போரை உருக்கிவிட்டது.. "பிரியா நாங்க அழுறது உனக்கு கேக்கலயா" என்று கதறி கதறி கேட்டனர்.

ஓட்டை
எனினும், இதுபோன்று ஹோல்ஸ் போடுவதும், அடுத்தக்கட்ட சிகிச்சை முயற்சி என்று சொல்கிறார்கள்.. அதேசமயம், தசை பிடிப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது என்றும், தசைகள் சிதைந்த இடத்தில் இறுக்கமாக கட்டு போட்டிருந்தால், அந்த நேரத்தில்தான், அந்த தசைகள் இன்னும் அதிகமாக சிதைய வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.. எனினும், பிரியாவுக்கு எந்த ஒரு சிகிச்சை முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு, அவரது நிலைமை ஆபத்தான சென்றுவிட்டதாலேயே எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறார்கள்.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications