தலித் அரசியல்.. பா. ரஞ்சித் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு.. ஆபத்து என எச்சரிக்கை
Recommended Video

சென்னை: பட்டியலின கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர், செ.கு.தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டியலின மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக, எம்பி, எம்எல்ஏக்கள், குரல் எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அப்படி குரல் எழுப்பினால் தங்கள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று பயப்படுகிறார்கள்.

வெளியே வாருங்கள்
குரல் எழுப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயப்படுபவர்கள் கட்சியில் இருந்து வெளியே வாருங்கள். நாங்கள் அவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்கிறோம். குறைந்தபட்சம் லோக்சபா தனித்தொகுதிகளிலாவது பட்டியலின கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் அப்படியான கட்சிகளில் இருந்து மட்டுமே மக்களை எம்பிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரவிக்குமார் கருத்து
ஆணவ கொலை குறித்து பெரிய கட்சிகளின் எம்.பி, எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பவில்லை. இவ்வாறு ரஞ்சித் தனது ஆதங்கத்தை பதிவு செய்கையில் கருத்தை முன் வைத்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இந்த கருத்தை மறுக்கிறார்.

அணி திரட்டல்
ரவிக்குமார் கூறுகையில், இவ்வாறான அணிதிரட்டல் என்பது சனாதன தர்மவாதிகளின் நோக்கம் என்றும், ஜாதி ரீதியாக மக்கள் பிரிந்து இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நோக்கம். தலித்துகளை அணிதிரட்டுவதும் மூலமாக அவர்களின் நோக்கம் நிறைவேறிவிடும் என்று எச்சரிக்கிறார் ரவிக்குமார்.

மைய நீரோட்டம்
இது தொடர்பாக ட்விட்டரிலும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே பாமக கட்சி, தலித் கட்சிகள் அல்லாத கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கியது. தலித்துகள் மீதான வன்கொடுமை அதன்பிறகு அதிகரித்ததாகவும் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார். எனவே மைய நீரோட்டத்தில் இணைந்து உரிமைகளை மீட்டெடுப்பது தான் சரியான வழி, என்று ரவிக்குமார் தெரிவிக்கிறார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications