புயல், கனமழை! மக்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது.. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அட்வைஸ்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல், கனமழை நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார நிலையில், வைத்துள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே, கனமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வெளியில் செல்ல வேண்டாம்: இந்திய வானிலை ஆய்வு மையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் நம்பி பின்பற்றலாம். பேட்டரிகளை முறை யாக பராமரிப்பது, ரேடியோ. டி.வி.க்களை தொடர்ந்து கவனிப்பது, பதற்றத்தை தவிர்த்து அமைதி காப்பது. சூறைக்காற்றினால் ஜன்னல், கதவுகள் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.
சில நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு செல்ல வேண்டும். புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க கூடாது. வானிலை மையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.
காய்ச்சிய குடிநீரை: மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகளுக்கு அருகில் நிற்கவோ கூடாது. ஈரமாக இருந்தால் மின்சாதனங்களை உபயோகிக்க கூடாது. பழுதடைந்த கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டாம். கயிறு. மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நன்கு காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சுத்தமான உணவை உட்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். மழைக்காலங்களில் அவசியம் இன்றி வெளியில் நடமாடக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications