கணவரின் நண்பர், அறநிலையத்துறை அதிகாரி, முருகன்... நிர்மலா தேவியின் உல்லாசபறவைகள் லிஸ்ட்!
Recommended Video

சென்னை : கல்லூரி மாணவிகளை போனில் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் சிபிசிஐடிக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தனக்கு யார் யாருடன் நெருக்கம் ஏற்பட்டது. யார் யாருடன் உல்லாசமாக இருந்தார் என்ற லிஸ்ட்டை அவிழ்த்து விட்டுள்ளார்.
கல்லூரிக்கு படிக்க வந்த மாணவிகளை பணத்தாசை, பணியாசை காட்டி உயர் அதிகாரிகளின் படுக்கைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி சிபிசிஐடியில் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. போதும் போதும் லிஸ்ட் இவ்வளவு தானா நீண்டுகிட்டே போகுதே என்று போலீசாரே அசரம் அளவுக்கு இருக்கிறது நிர்மலாவின் வாக்குமூலம்.
லாட்ஜ், வீடு, கார் என தான் உல்லாசமாக இருந்த இடங்கள் யார் யாருடன் உல்லாசமாக இருந்தார் என்பதையும் தெரிவித்துள்ளார் நிர்மலா. சிபிசிஐடி விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் எனக்கும் எனது கணவர் சரவண பாண்டியனுக்கும் 2003-ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இதை சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு நெருங்கி பழகினோம்.

கணவருக்கும் தெரியும்
2008-ம் ஆண்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி கிடைத்ததால் அங்கு பணியில் சேர்ந்தேன். 2011ம் ஆண்டில் சங்கரன்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் அறிமுகம் ஆனார். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது, என்னை திருமணம் செய்ய விரும்பினார் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். நாங்கள் பழகுவது எனது கணவருக்கும் தெரியும்.

கணவரின் நண்பர்களுடனும் பழக்கம்
இதனிடையே எனது கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப் பழகினேன். கணவருடன் மீண்டும் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க வந்த கணவரின் நண்பர்களுடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டு,அவர்களுடனும் உல்லாசமாக இருந்தேன். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக இருந்தேன்.

முருகன், கருப்பசாமி அறிமுகம்
2016-ம் ஆண்டு காமராஜர் பல்கலை. அதிகாரி, பானு சத்திரிய கல்லூரி உதவி பேராசிரியர்கள் 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் முருகன் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் கருப்பசாமியை நேரில் சந்தித்து பேசினேன். அவர் காமராஜர் பல்கலை. இயக்குனர் ஒருவரை எனக்கு அறிமுகம் செய்தார்.

தனிமையில் ஜாலி
நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் முருகன் எனக்கு போன் செய்து அருப்புக்கோட்டைக்கு வந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார். பின்னர் ஒருமுறை நானும், கருப்பசாமியும் அவரது சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் சென்றோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்தி காரில் உல்லாசமாக இருந்தோம்.

முருகன் , கருப்பசாமிக்காக வலை
முருகன், கருப்பசாமி கேட்டுக் கொண்டதால், மார்ச் 12 ஆம் தேதி என் செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இதை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன் என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடக்கருமமே
நிர்மலா தேவியின் லிஸ்ட்டை பார்த்தால் இவர் பேராசிரியர் தானா என்ற சந்தேகம் வருகிறது. ஆசிரியர்களிடம் இருந்து தான் நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதனால் தான் மாதா, பிதாவிற்கு அடுத்த படியாக குருவை வைத்தார்கள். ஆனால் இவரோ தானும் கெட்டதெல்லாமல் எந்த விஷயத்திற்காக மாணவிகளுக்கு குருவாக இருக்கப் பார்த்திருக்கிறார் பாருங்கள்.












Click it and Unblock the Notifications