Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும். அதேவேளையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக, பாஜக அக்கவுண்ட் திறக்க வாய்ப்புள்ளது. சீமானின் நாம் தமிழர் கணிசமாக ஓட்டு பிடித்தாலம் வெற்றி வாய்ப்பில்லை என ராஜாநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Professor Rajanayagam team survey says DMK alliance may win 37 seats and ADMK BJP gets each seat in TN Lok Sabha Election


இந்நிலையில் தான் பல்வேறு அமைப்புகள், செய்தி நிறுவனங்கள் லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜநாயகம் டீம் சார்பில் ஒவ்வொரு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் சமயங்களில் மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்தி ரிசல்ட்டை வெளியிடுவது வழக்கமான பணியாகும். அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கினார்.

இந்த கருத்துக்கணிப்பு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு மூலம் பெறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தேனி தவிர தமிழகத்தில் 38 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில் தான் வரும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஒரு தொகுதி குறைந்து 38 இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக, பாஜக கட்சிகள் வென்று அக்கவுண்ட்டை திறக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் வென்றார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வமும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையிலும் கூட மீண்டும் அதிமுக இந்த தேர்தலில் ஒரு இடத்தில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2014ல் கன்னியாகுமரியில் வென்று எம்பியான பொன் ராதாகிருஷ்ணன் கூட கடந்த முறை தோற்றார். இருப்பினும் வரும் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெல்லும் என ராஜநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் இடங்களை கைப்பற்ற அதிமுக, பாஜக முயன்று வரும் நிலையில் ராஜநாயகம் டீம் கருத்து கணிப்பு அந்த கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என கணிக்கப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மேலும் லோக்சபா தேர்தல் தொடக்க பிரசாரத்தின் அடிப்படையில் பார்த்தால் திமுக கூட்டணிக்கு 41.3 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு 24.2 சதவீதம் பேரும், பாஜக கூட்டணிக்கு 17.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி 12.8 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 2.4 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு 2.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ராஜநாயகம் டீம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+