மொட்டை மாடியில் விபச்சாரம்.. கணவர் கீழ் வீட்டில்.. பதற வைத்த ராதா.. அதிர்ந்து போன அன்பு!
கணவனுக்கு தெரியாமல் வீட்டிற்குள் விபச்சாரம் செய்த மனைவி
சென்னை: கணவர் வீட்டின் கீழ் பகுதியில் இருந்தால், மொட்டை மாடியில் விபச்சாரம் செய்வாராம் மனைவி ராதா.. இதை கேள்விப்பட்டு, அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த கணவர் இன்னும் மீளவே இல்லை.
சென்னை, செங்குன்றம், பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஒரு லாரி டிரைவர்.. இவருக்கு 2 மனைவி.. 2-வது மனைவி பெயர் ராதா.
இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்.. கடந்த 5-ம் தேதி மதியானம் எல்லாரும் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு கும்பல் அன்புவின் வீட்டிற்குள் நுழைந்தது.. அங்கிருந்த நகைகள், 3 செல்போன்களை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு, செங்குன்றம் ஸ்டேஷனில் புகார் செய்தார்.. போலீசாரும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதேபோல, அவர்களது செல்போன் சிக்னலையும் கண்காணித்தனர்.. மீஞ்சூர் பகுதியில் சிக்னல் காட்டியதும், அந்த பகுதியை சுற்றி வளைத்து கடைசியில் ரகு என்பவரை பிடித்துவிட்டது. இவர் வியாசர்பாடியை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது.. இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது பல பகீர் விஷயங்கள் வெளியே வந்தன. இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவன் ரகு.. அன்புவின் மனைவி ராதாவுக்கும் இவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
திடீர்னு பாடுவார்.. இல்லாட்டி கவிதை படிப்பார்.. இப்ப டக்குனு கடலுக்குள்ளயே போயிட்டாரே.. ஜெயக்குமார்
இதைதவிர, ராதா விபச்சாரம் செய்து வருகிறாராம்.. அதாவது அந்த ஏரியாவில் யாரெல்லாம் வறுமையில் இருக்கிறார்களோ, அந்த பெண்களை குறி வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்காக தன் வீட்டு மொட்டை மாடியில் ஒரு ரூம் ரகசியமாக வைத்திருக்கிறாராம்... இப்படி ஒரு ரூம் அந்த வீட்டில் உள்ளதே கணவருக்கு தெரியாதாம்.
போன வாரம்கூட ரகு, வேறு ஒரு பெண்ணுடன் ராதா வீட்டுக்கு வந்து ஜாலியாக இருந்திருக்கிறார்.. அப்போதுதான், ராதாவீட்டில் நகைகளை கவனித்திருக்கிறார் ரகு.. பிறகு ஆட்களுடன் வந்து கொள்ளை அடித்து விட்டு சென்றிருக்கிறார். இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. ஏழரை சவரன் நகை, வெள்ளி நகை, ரூ.9,000 மதிப்புள்ள 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.. இவர்கள் எல்லார் மீதும் ஏற்கனவே கேஸ்கள் நிறைய இருக்கிறதாம்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.. ஆனால், தன் வீட்டு மொட்டை மாடியில் இவ்வளவு நாள் விபச்சாரம் நடந்து வந்ததை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் இருந்து கணவன் அன்பு இன்னும் மீளவே இல்லை.