Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வேளச்சேரி ஏரியில் இடிக்கப்பட உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள்.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்கு வேளச்சேரி ஏரியை சுற்றி உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி ஏரி 1975ம் ஆண்டு வாக்கில் சுமார் 265 ஏக்கர் பரப்பளவு பரந்து விரிந்து காணப்பட்டது. இன்று உருவாகி உள்ள 100 அடி சாலை பகுதியில் ஆதம்பாக்கம் வரை முழுமையாக காணப்பட்டது. ஆனால் வேளச்சேரியில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக ஏரி ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. சாலை விரிவாக்கம், பொதுமக்கள் வீடுகள், குடிசை மாற்று வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்பட பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

velachery encroachment

இதனால் 265 ஏக்கர் ஏரி தற்போது வெறும் 55 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது. வேளச்சேரி இன்று வரை பெருமழை வந்தால் வெள்ளத்தில் மிதக்க முக்கிய காரணம் அது நீர்நிலை பகுதி என்பது தான். அதேபோல் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் காரணமாக அந்த பகுதி வழியாக பள்ளிக்கரணை ஏரி நோக்கி செல்ல வேண்டிய வெள்ள வடிநீர், வெளியேற வழியின்றி குடியிருப்புகளையும் சூழ்கிறது.

அதுமட்டுமின்றி வேளச்சேரி ஏரி முதல் வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையம் வரை உள்ள பகுதி தாழ்வான பகுதி என்பதால், பெருமழை வந்தால், தண்ணீர் அந்த பகுதி தத்தளிக்கும். அரசு அந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க புதிய கால்வாய் ஒன்றை உருவாக்கி அதனை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயுடன் இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடங்களை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.19.40 கோடியில் ஏரியில் படகு சவாரியுடன் 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளார்கள். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்டோர், வேளச்சேரி 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சாலைக்கு வரவிடாமல் தடுத்து போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அதையும் மீறி மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், 2 நாள் கழித்து மீண்டும் வந்து கணக்கெடுப்பு பணியை தொடங்குவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+