தமிழக அரசின் தரமான செயல்! மனதார வாழ்த்தும் மக்கள்! ஸ்பெஷல் பஸ்களில் 'நோ ஸ்டாண்டிங் ஆல் சிட்டிங்'!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு முன்னேற்பாடுகளை முறையாக செய்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
இதனிடையே தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 6,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை
சென்னையில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியை பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 4 நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி பெருங்களத்தூர் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊருக்கு போக பேருந்துகளில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஊசலாட்டத்துடன் பேருந்து நிலையங்க்ளுக்கு வந்த மக்களுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்றே கூறலாம்.

முன் திட்டமிடல்
ஆம், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்தாண்டு முறைப்படி முன் திடமிடலுடன் அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக பயணிக்க முடிந்தது. ஜன்னல் வழியாக கர்சீப்பை வீசி இடம்பிடிக்க தேவையின்றி, பொறுமையாக எல்லோருக்கும் இடம் கிடைக்கும் வகையில் பேருந்துகள் வரிசைக் கட்டி நின்றன. இதனால் சீட் பிடிப்பதில் சண்டை சச்சரவின்றி மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்திருக்கிறர்கள்.

அமைச்சர் சிவசங்கர்
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள பலரும், தீபாவளிக்கு முன்னர் சிறப்பு பேருந்துகளை அதிகளவில் இயக்கியது போல், தீபாவளி முடிந்த பின்னரும் நிறைய எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதேபோல் எந்தப் பேருந்திலும் யாரும் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய அவலம் இல்லை எனவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல்வர் ஆலோசனை
தீபாவளிக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் விவகாரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தியதோடு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். அமைச்சர், அதிகாரிகள், ஊழியர்கள் என போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது கவனிக்கத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications