வந்தது அறிவிப்பு.. சென்னை மின்சார ரயிலில் பொதுமக்கள் நாளை முதல் பயணம் செய்ய அனுமதி..!
நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது
சென்னை: சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தது.. அதனால், வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை படிப்படியான தற்போது இயங்கி வருகிறது.

அந்த வகையில், அத்தியாவசிய பணி, அரசு பணிக்கு செல்பவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என்றும், கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்திருந்தது:
இந்த நிலையில் நாளை முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில், மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வே தகவல் அறிவித்துள்ளது.
மேலும், பயணம் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே பொதுமக்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications