அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 1 சீட்.. எந்த தொகுதி? உறுதியாக சொன்ன பூவை ஜெகன்மூர்த்தி!
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி உடன்பாடு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு பேச்சுகளும் அதிமுக சார்பில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி அறிவித்தார்.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது.” எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி சென்னையில் இன்று செந்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நிச்சயம் தொடர்கிறது. இந்த தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி வெற்றி பெற அனைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபடுவோம்.
அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இது தொடர்பாக அதிமுகவிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய பூவை ஜெகன்மூர்த்தி, “தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வராது என்பது பிரதமர் மோடிக்குத் தெரியும்.
பாஜக மீது தமிழக மக்களிடையே வெறுப்பு உள்ளது. வெறும் 3 சதவீதம் வாக்கு சதத்தை வைத்துள்ள பாஜக, தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாகவா இருக்கிறது? அதுபோல திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆனால், அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
பாமர மக்களிடையே அதிமுக என்றால் எம்.ஜி.ஆர் கட்சி, ஜெயலலிதா கட்சி, இரட்டை இலை என்று தெளிவாகப் பதிந்துள்ளது. கட்சியை எடப்பாடி பழனிசாமி சீராக நடத்தி வருகிறார். அதனால், அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வைப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications