கேட்டது கிடைக்கவில்லை.. தேர்தலில் போட்டியிடவில்லை.. புதியநீதிக் கட்சி திடீர் முடிவு
சென்னை: அதிமுக கூட்டணியில் இன்னொரு அதிருப்தி வெடித்துள்ளது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று புதிய நீதிக் கட்சி அறிவித்துள்ளது.
சமீபத்தில்தான் தேமுதிக, அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. அக்கட்சி 41 தொகுதிகள் கேட்டிருந்தது. ஆனால் 13 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக அதிமுக கூறியதால் தேமுதிக விலகியது.

இந்த நிலையில் புதிய நீதிக் கட்சி 9 இடங்கள் வரை அதிமுகவிடம் கேட்டிருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 2 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முன்வந்ததாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி இன்று கூட்டணியிலிருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளது.
தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் சீட் கொடுக்கப்படாததால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற இக்கட்சி லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிட்டார். பணத்தை தண்ணீராக இறைத்தார். ஆனாலும் தோல்வியைத் தழுவினார். இந்த முறை சட்டசபைத் தேர்தலில் வேலூரில் போட்டியிடும் கனவில் இருந்தார். ஆனால் தற்போது எல்லாம் கனவாகி விட்டது.












Click it and Unblock the Notifications