மோடி அரசு இல்லை.. தமிழகத்திற்கு காங். அரசால்தான் அதிக நன்மை.. 60% மக்கள் கருத்து- புதியதலைமுறை சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான், தமிழகத்திற்கு கூடுதல் நன்மைகள் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்து அதை இன்று வெளியிட்டது.

இந்த கருத்துக்கணிப்பில் தேர்தல் கருத்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மற்ற அம்சங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி மக்களிடம் விடை காணப்பட்டது.

Puthiyathalaimurai Tamil Nadu election opinion poll says, Modi government has not done much for Tamil Nadu

அதில் ஒரு கேள்வியில் மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசை விட தற்போதைய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் நன்மைகளை செய்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்று முன்வைக்கப்பட்டது.

அதில் 22.87 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்து உள்ளனர். அதேநேரம் இல்லை என்று சொன்னவர்கள் 60.03 சதவீதம்.

அதாவது முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு தான் தமிழகத்திற்கு அதிக நன்மைகளை செய்துள்ளது என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் கருத்து கூறியுள்ளனர். வேறு கருத்து கூறியோர் எண்ணிக்கை 7.09%. தெரியாது அல்லது சொல்ல இயலாது என்று கூறியவர்கள் 10.1 சதவீதம் பேர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+