Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் கண் கலங்கிய அமைச்சர் எ.வ.வேலு! பாராட்டு மழையில் நனைந்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசும் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார்.

காலம் உள்ளவரை அவருக்கு நன்றி மறக்காமல் இருப்பேன் என உணர்ச்சிவசப்பட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டு மழையில் நனைத்தார்.

மேலும், நகராட்சிகளில் 59 பைபாஸ் சாலைகள், சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உயர்மட்டப் பாலம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மானியக்கோரிக்கை

மானியக்கோரிக்கை

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இந்த துறைகள் அனைத்துக்கும் எ.வ.வேலு தான் அமைச்சர் என்பதால், காலை முதலே அவர் தான் சட்டப்பேரவையில் நடுநாயகமாக தொடர்ந்து பேசி வந்தார். அதோடு முக்கிய அறிவிப்புகள் பலவற்றையும் வெளியிட்டார்.

கண் கலங்கினார்

கண் கலங்கினார்

மதிய உணவுக்கு பிறகு நெடுஞ்சாலைத் துறை தொடர்பான அறிவிப்புகளை வாசிப்பதற்கு முன்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி குறிப்பிட்டு பேசும் போது தன்னையறியாமல் கண்கள் கலங்கினார். தழுதழுத்த குரலில் அவர் பேசியதை முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கவனித்தனர். மேலும், தொடர்ந்து பேசிய அவர் தனது பாராட்டு மழையில் முதலமைச்சர் ஸ்டாலினை நனைய வைத்தார்.

நேரம் ஆனது

நேரம் ஆனது

எ.வ.வேலு நேரத்தை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். மூத்த அமைச்சர் மற்றும் முக்கியத் துறைகள் மீதான மானியக்கோரிக்கை என்பதால் சபாநாயகர் அப்பாவுவும் வேறு வழியின்றி அமைதிகாத்தார். இடை இடையே தண்ணீர் அருந்திய அவர், ''தண்ணீர் எடுத்து கொடு உனக்கு எத்தனை தடவை தண்ணீர் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்'' என தனது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஓபன் மைக்கிலேயே கலாய்த்தார்.

சிரிப்பலை

சிரிப்பலை

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சுமொழியும் அவரது பேச்சில் இருந்த நகைச்சுவை நயமும் பேரவையில் இருந்த முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் சிரிக்க வைத்தது. நகராட்சிகளில் பைபாஸ் சாலைகள், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்டப்பாலம், ஊட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்க ரூ.70 கோடி, பொதுப்பணித்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்டவைகள் அவரது அறிபிப்புகளில் முக்கியமானதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+