ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற ஓபிஎஸ்: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: அரசு நிலத்தை தனது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் 10.5 ஏக்கர் அரசு நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு வாரம் முன்னர் கோயம்பேட்டில் உள்ள தனியார் துறை நிறுவனத்துக்கு அரசு நிலம் 10.5 ஏக்கரை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

ஓபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார் மீது குற்றச்சாட்டு
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில் அரசின் நிலத்தை விதிமுறைகளை மீறி அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலத்தை ஓபிஎஸ் மகன்கள் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு விற்றதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

அரசு விதி மீறல், கட்டுமானத்துக்காகவும் அனுமதி
இதுதவிர நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியையும் உடனடியாக வழங்கியதாக அவரது புகாரில் கூறியிருந்தார். ஏற்கெனவே ஆட்சி மாறிய நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான முறைகேடு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டு எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டும் நடந்தது.

ஓபிஎஸ் மீது குவியும் ரூ.1000 கோடி புகார்
ஓபிஎஸ் அமைச்சராக இருந்த வீட்டுவசதித்துறையின் கீழ் வரும் கே.பி.பார்க் கட்டுமானம் மோசமாக இருந்ததை ஒட்டி அதன் கட்டுமான நிறுவனம் அதை மராமத்து பார்த்து தரும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனியில் கிராவல் மண் எடுப்பதில் அரசு அனுமதியின்றி முறைகேடாக எடுத்ததில் ரூ.500 கோடி இழப்பு என சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதுகுறித்து கண்காணிப்பு ஆணைய விசாரணையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆவணங்களை ஒப்படைத்த ஆர்.எஸ்.பாரதி
இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி புகாரின்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆர்.எஸ்.பாரதி அழைக்கப்பட்டிருந்தார். இன்று விசாரணைக்கு ஆஜரான ஆர்.எஸ்.பாரதி தனது புகார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒப்படைத்து விளக்கமளித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிள்ளைகள் பங்குதாரராக உள்ள நிறுவனம் ஓபிஎஸ்சுக்கு வாங்கிக் கொடுத்த கார்
அப்போது அவர் கூறியதாவது; "ஓபிஎஸ் மூன்று பிள்ளைகளும் ஒரு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளனர். ஓபிஎஸ் பயன்படுத்தும் கார், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் பெயரில் தான் வாங்கியுள்ளனர். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் விற்பனை
அரசு இடத்தை அவரது மகன் பார்டனராக உள்ள அல்லது அந்த தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் எனும் நிறுவனத்துக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது. இதனால் அரசுக்கு ஏறத்தாழ ரூ. 500 கோடி இழப்பு. அரசுக்கு நிலம் பயன்படாமல் இருந்தால் அதை பொது ஏலத்திற்கு விட வேண்டும். ஆனால் அதை செய்யாமல் ஆங்கிலேயர் காலத்து அவசர சட்டம் போல் கொடுத்துள்ளனர்" என்று பேட்டி அளித்தார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications