80: 20 கணக்கில் வைத்தியம்.. ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த ரமணி.. யார் இவர்?
சென்னை: கோவையை சேர்ந்த மருத்துவர் ஆர் வி ரமணிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. யார் இந்த ராமநாதன் வி ரமணி?
குடியரசு தினவிழாவையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி நேற்றைய தினமும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை, மருத்துவம், ஆன்மீகம் உள்ளிட்ட துறைகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

யார் இந்த ரமணி
கோவைச் சேர்ந்த மருத்துவர் ஆ வி ரமணிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இவர் என்பதையும் இவர் செய்த சாதனைகளையும் பார்ப்போம்.

கண் மருத்துவமனை
டாக்டர் ஆர்விஆர் என அன்போடு அழைக்கப்படுவர் ரமணி. இவர் சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவராவார். இந்த அறக்கட்டளையின் கீழ் சங்கரா கண் மருத்துவமனை இயங்கி வருகிறது.

சிறந்த மாணவர்
கண் மருத்துவரான ரமணியின் சங்கரா கண் மருத்துவமனை நாட்டின் முக்கிய கண் பாதுகாப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. கஸ்தூர்பா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் அங்கு சிறப்பான மாணவராக திகழ்ந்தார்.

சங்கரா மருத்துவமனை
இவர் காஞ்சி காமகோடி மருத்துவ மையம் என்ற கிளீனிக்கை கடந்த 1947-ஆம் ஆண்டு கோவையில் தொடங்கினார். நோயாளியிடம் இருந்து 50 பைசாவை பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 1985-ஆம் ஆண்டு சங்கரா கண் அறக்கட்டளையை தொடங்கினார்.

இலவசம்
சங்கரா கண் அறக்கட்டளையின் கீழ் இந்தியா முழுவதும் கோவை, பெங்களூரு, குண்டூர், சிமோகா, லூதியானா, விஜயவாடா ஆகிய 6 இடங்களில் 10 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. அதோடு அறுவை சிகிச்சைகளும் இலவசமாகும். மீதம் 20 சதவீதம் பணக்காரர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது.

விருதுகள்
மருத்துவத் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கண்ணுக்கு ஒளியை தரும் ரமணி இதுவரை பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இதில் முக்கியமானவையாக சென்னை கேஎம்சி அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருது, வேதா வியாசா சபா அறக்கட்டளையின் வைத்திய ரத்னா விருது, அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் இந்தியாவின் ரோல்மாடல் விருது, கண் மருத்துவத் துறையின் சார்பில் டாக்டர் ஜி வெங்கடசாமி நினைவு விருது, கோவை மக்களால் நேத்ர நேட்டா என்ற விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications