Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

Recommended Video

    முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு | Economic Advisory Council | Oneindia Tamil

    தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், 16வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். அதோடு தமிழ்நாடு அரசு இனி அறிவிக்க போகும் திட்டங்கள், அறிவிப்புகளை ஆளுநர் என்ற முறையில் சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

    திட்டம்

    திட்டம்

    இதில் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டமான நிபுணர் குழு திட்டம் குறித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட உள்ளது.

    குழு

    குழு

    அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். பொருளாதார துறையில் வல்லுனர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைத்து வரப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது.

    சரிவு

    சரிவு

    போதிய வருமானம் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் பொருளாதார ரீதியாக முடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகுராம் ராஜன் உட்பட பல்வேறு வல்லுனர்களை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது.கண்டிப்பாக தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டு கொண்டு வர இது பெரிய உதவியாக இருக்கும். கொரோனாவிற்கு பின் தமிழ்நாடு வீறுநடை போட இது வழிவகுக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+