தண்டித்தது தப்புன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லலயே.. ராகுல் வழக்கு குறித்து எச்.ராஜா கொடுத்த புது விளக்கம்
சென்னை: ராகுல் காந்தி விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது உரையின் போது, "மோடி பெயர்" குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்திருந்தது. அதில் நீதிபதி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி பதவியை மீண்டும் பெற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், ராகுல் காந்தி விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தண்டித்ததே தவறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.
வேனும் என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு இன்னும் ஒரு ஓட்டு அவ்வளவு தான்.. நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதற்கும்.. ஒரு ஓட்டு குறைவாக பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.. இவ்வாறு அவர் கூறினார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications